மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.
புத்தளத்தில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று முன்தினம்(28) இடம்பெற்றுள்ளது.
இரும்பிலான கட்டட நிர்மாண உபகரணத்தின் மீது மின்சாரம் பாய்ந்ததால், அதனைத் தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிர் பிழைத்துள்ளார். எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment