Header Ads

test

சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி உபகரணங்கள்.

 சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் யாழ்ப்பாணத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வலைகள், நேற்றையதினம் (24.12.2024) யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 200 கடற்றொழில் பயனாளிகளுக்கு 06 வலைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு பயனாளிக்கு 60,000 பெறுமதியான வலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராசசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.



No comments