Header Ads

test

பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த நபர் பொலிசாரால் கைது.

 நுவரெலியா மாவட்டம், நோட்டன் பிரிட்ஜ் 04 ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம்  (30) பிற்பகல் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இதற்கு முன்னர் 9 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து பிரதேசத்தை விட்டு தப்பியோடி மாவனெல்லையில் சுமார் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சந்தேகநபர் நேற்று முன்தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸில் கையொப்பமிட வந்துள்ளார்.

பின்னர், சந்தேகநபரின் பிணையில் கையொப்பமிட்ட தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்ற அவர், அவரது மகளை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் படி, வீதித் தடைகளை பயன்படுத்தி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படும் பாடசாலை மாணவி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதான நோட்டன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments